headlines

img

குருபீடத்தின் குரலில்...

ஒரு மாநிலத்தில் ஆளுநர் பதவி என்பது அம்மாநில சட்டமன்றத்தின் முடிவுக்கு, அமைச்சரவையின் முடிவுக்கு ஒப்புதல் தருகிற பணி என்பதை மறந்துவிட்டு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய எஜமானர்களான ஆர்எஸ்எஸ் - பாஜகவினரின் கொள்கை விளக்கப் பிரச்சாரகராகவே நடந்து கொண்டு வருகிறார். இது மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப் பட்ட ஆட்சிக்கு இடையூறு விளைவிப்பது மட்டு மல்லாமல், தமிழ் மக்களுக்கு துரோகம் விளை விப்பதுமாகும்.

திருச்சியில் ஞாயிறன்று நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய ஆர்.என்.ரவி தமிழகத்தின் சுதந்திரப் போராட்டம் பற்றியும், ஆரியம்- திரா விடம் பற்றியும் கதைத்திருக்கிறார். நாட்டின் சின்னஞ்சிறிய மாநிலமான நாகாலாந்தில் ஆயி ரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் இருந்துள்ள னர் என்றும், தமிழ்நாட்டில் ஏராளமானோர் இருந்திருக்க வேண்டுமென்றும் அவர்களது வரலாறு மறைக்கப்பட்டிருப்பதாகவும், புதிதாக ‘கண்டு பிடித்து’ கூறியிருக்கிறார்.

நாட்டின் முதல் சுதந்திரப் போர் என்று குறிப்பி டப்படுகிற 1857 சிப்பாய் எழுச்சிக்கு 50 ஆண்டு களுக்கு முன்னதாகவே 1806இல் தமிழகத்தின் வேலூரில் பிரிட்டிஷாருக்கு எதிரான சிப்பாய் கள் எழுச்சி நடைபெற்றது. அதற்கு முன்பிருந்தே சுதந்திரப் போராட்டம் நடைபெற்று வந்துள் ளது. ஆனால் இதையெல்லாம் மறைக்கும் நோக் கத்துடன், இப்போதைய பாஜக ஆட்சியாளர் கள்தான் புதிய வரலாறு எழுதுவதாகக் கூறு கிறார்கள்; தங்களது துரோக வரலாற்றை மறைக் கப் பார்க்கிறார்கள். ஆனால் ஆர்.என்.ரவி அதை மறைத்துவிட்டு, மறந்துவிட்டு புதிதாக உளறிக் கொட்டுகிறார். 

இவரது குருபீடமான ஆர்எஸ்எஸ் பிரிட்டி ஷாருக்கு அடிமைச் சேவகம் செய்த வரலாற்றை மறைப்பதற்காகவே தீவிரமாக சுதந்திரப் போராட்ட தியாகிகள் பற்றி பேசுகிறார். இந்து மகாசபை, ஆர்எஸ்எஸ் பாரம்பரியத்தில் விடு தலைப் போராட்ட வீரர்கள் யாரும் இல்லை. கேட்டால் சாவர்க்கர் இல்லையா என்பார்கள். அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்தவர் என்பது மட்டுமல்ல, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமே பென்சன் வாங்கி ‘பெருமை’ சேர்த்தவர்.

காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட சாவர்க்கரின் பிறந்த நாளில்தான் மோடி அரசு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்தது என்பது காந்தி உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு பெருமை சேர்ப்பதா?